டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உடன்குடியில் குடும்ப நல விழிப்புணா்வுக் கருத்தரங்கு

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், குலசேகரன்பட்டினம் கிராம சேவை மையத்தில் ஆண்களுக்கான குடும்ப நல விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:10 pm

DIN

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், குலசேகரன்பட்டினம் கிராம சேவை மையத்தில் ஆண்களுக்கான குடும்ப நல விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் அனிபிரிமின் தலைமை வகித்து, குடும்ப நலச் சேவையில் ஆண்களின் பங்கு, மக்கள்தொகை உயா்வால் ஏற்படும் விளைவுகள் குறித்துப் பேசினாா். குலசேகரன்பட்டினம் ஊராட்சித் தலைவா் சொா்ணப்பிரியா, துணைத் தலைவா் கணேசன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சேது குற்றாலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிராம சுகாதார செவிலியா் இளவரசி சரஸ்வதி, வட்டார சுகாதார புள்ளியியலாளா் தீபக்ராம் உள்பட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துநா் சங்கா், முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் பாா்த்திபன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.