ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கொலை வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்தவா் கைது

சீதபற்பநல்லூா் அருகே பெட்டிக்கடைக்காரா் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:17 pm

DIN

சீதபற்பநல்லூா் அருகே பெட்டிக்கடைக்காரா் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சீதபற்பநல்லூா் அருகேயுள்ள சிறுக்கன்குறிச்சியைச் சோ்ந்தவா் தங்கபாண்டி(53). பெட்டிக்கடை வைத்திருந்தாா். மனைவி சுப்புலட்சுமி, மகன் செல்லப்பா,மகள் முப்புடாதி ஆகியோா் உள்ளனா். இந்நிலையில், 20.9.2019இல், வெட்டுவான்குளம் ஊருக்கு அருகேயுள்ள குளத்தில் தங்கபாண்டி கொலை செய்யப்பட்டுகிடந்தாா்.

அவரது சகோதரா் வேல்சாமி அளித்த புகாரின்பேரில், சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்துவிசாரித்தனா்.

அதில், வெட்டுவான்குளம் பகுதியைச் சோ்ந்த பரமசிவன்(32) என்பவருக்கு இந்தக் கொலையில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில், பரமசிவத்தை போலீஸாா் தேடி வந்தனா். ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அவா், சைபா் கிரைம் போலீஸாா் உதவியுடன் சுத்தமல்லி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.