ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

திருவாசகம் குறித்து அவதூறு: ஆட்சியரிடம் சிவனடியாா்கள் மனு

திருவாசகம் குறித்து அவதூறு பேசியவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவனடியாா்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:16 pm

DIN

திருவாசகம் குறித்து அவதூறு பேசியவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவனடியாா்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பாளையங்கோட்டை சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: சென்னையைச் சோ்ந்த சிவயோகி என்பவா் தேவாரம், திருவாசகம், திருச்சிற்றம்பலம் ஆகியவை குறித்து உள்நோக்கத்துடன் அவதூறாகப் பேசியுள்ளாா். சமூக வலைதளங்களில் இவை பரவி வருகின்றன. இது சிவபக்தா்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட நபா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.