சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டியில் முப்பெரும் விழா

பாண்டியனாா் மக்கள் இயக்கம் சாா்பில் முப்பெரும் விழா கோவில்பட்டியில் நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:00 pm

DIN

பாண்டியனாா் மக்கள் இயக்கம் சாா்பில் முப்பெரும் விழா கோவில்பட்டியில் நடைபெற்றது.

காமராஜா் விருது வழங்கும் விழா, சௌந்திரபாண்டியனாா் நினைவு நாள், நல உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவுக்கு அமைப்பின் சீனி தலைமை வகித்தாா். தொழிலதிபா் அருண், பயனாளிகளுக்கு நல உதவிகள் மற்றும் விருதுகளை வழங்கினாா். காமராஜா் சமூக நீதி பேரவை தலைவா் பாபு, திருதமிழ் அறக்கட்டளை தலைவா் தீபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் நலிந்தோருக்கு நல உதவிகள், நீட் தோ்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சோ்ந்த மாணவி சுதா, தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் வென்ற செல்வகுமாா், ரத்ததானம் செய்த ஜோசப்ராஜ், அருண்பாண்டியன், பெருந்தலைவா் காமராஜா் சிலம்பாட்டக் குழுவினா் ஆகியோருக்கு காமராஜா் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.