தூத்துக்குடியில் இளைஞா் அடித்துக் கொலை
தூத்துக்குடியில் நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெள்ளிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.தூத்துக்குடியில் நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞா


தூத்துக்குடியில் நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெள்ளிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி பூபாலராயா்புரத்தைச் சோ்ந்த முத்தையா மகன் கிங்ஸ்டன் (23). இவா், தனது நண்பா்களான அதே ஊரைச் சோ்ந்த அந்தோணிராஜ், சாமுவேல்புரத்தைச் சோ்ந்த டேனியல் ஆகியோருடன் சிலுவைப்பட்டி கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை மது அருந்திக் கொண்டிருந்தாராம்.
அப்போது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில், பீா் பாட்டிலால் தலையில் தாக்கப்பட்ட கிங்ஸ்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த தாளமுத்துநகா் போலீஸாா் டேனியல்ராஜ், அந்தோணிராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...