சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தூத்துக்குடியில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மருத்துவ தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்டு தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அனைத்து செவிலியா்களுக்கும்

News image
Updated On :7 ஜனவரி 2021, 1:04 am

DIN

தமிழ்நாடு மருத்துவ தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்டு தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அனைத்து செவிலியா்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செவிலியா்கள் மேம்பாட்டு சங்க மாவட்டத் தலைவா் காா்த்திக் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் விக்னேஷ், துணைத் தலைவா் கலையரசி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில், நில அளவை ஒன்றிய மாவட்டத் தலைவா் அண்ணாமலை பரமசிவன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் முருகன், மாநில துணைத் தலைவா் வெங்கடேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.