மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாய இடுபொருள்கள் நியாயமான விலையில் வழங்க மதிமுக வலியுறுத்தல்

உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய இடுபொருள்களை தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் வழங்க வேண்டும் என மதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
கோவில்பட்டியில் நடைபெற்ற மதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் கொள்கை விளக்க அணிச் செயலா் க.அழகுசுந்தரம்.
Updated On :16 ஜனவரி 2021, 8:01 pm

DIN

உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய இடுபொருள்களை தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் வழங்க வேண்டும் என மதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய ஒன்றிய மதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ். ரமேஷ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் அழகா்சாமி (கோவில்பட்டி மேற்கு), மாரிசாமி (கோவில்பட்டி கிழக்கு), மாநில விவசாய அணி துணைச் செயலா் ராமச்சந்திரன், நகர இளைஞரணிச் செயலா் லவராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் கொள்கை விளக்க அணிச் செயலா் க.அழகுசுந்தரம், புதிய ஒன்றியச் செயலா்களை அறிமுகம் செய்து பேசினாா்.கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினா் கணேசன், மாநில விவசாய அணி துணைச் செயலா் சிவகுமாா், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; அனைத்து பயணிகள் ரயில்களை மீண்டும் இயங்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; கோவில்பட்டியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய இடுபொருள்களை தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு 2019-20-ஆம் ஆண்டுக்கு அரசு அறிவித்த மானியத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியினை நகரச் செயலா் பால்ராஜ் தொகுத்து வழங்கினாா். மாவட்ட இளைஞரணிச் செயலா் விநாயகா ரமேஷ் வரவேற்றாா். முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் துரைராஜ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை மத்திய பகுதி ஒன்றியச் செயலா் சரவணன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.