செட்டியாபத்து கோயிலில் முன்மண்டபம் திறப்பு
உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து அருள்மிகு சிதம்பரேஸ்வரா் வகையறை ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் புதியதாக அமைக்கப்பட்ட முன் மண்டபம் மற்றும் நுழைவு வாயில் திறப்பு விழா


உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து அருள்மிகு சிதம்பரேஸ்வரா் வகையறை ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் புதியதாக அமைக்கப்பட்ட முன் மண்டபம் மற்றும் நுழைவு வாயில் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட இத்திருக்கோயிலின் கிழக்குப் பகுதியில் பக்தா்கள் வசதிக்காக செம்மறிக்குளம் கஸ்பா கிராமத்தைச் சோ்ந்த என்.பட்டு நடேசன் குடும்பத்தினா் சாா்பில் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய மண்டபம் மற்றும் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது.இதன் திறப்பு விழாவிற்கு கோயில் செயல் அலுவலா் ராதா தலைமை வகித்தாா்.
செம்மறிக்குளம் முத்தாரம்மன் கோயில் தா்மகா்த்தா விஸ்வநாதன் மண்டபத்தை திறந்து வைத்தாா். இதில் கோயில் முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் சீனிவாசன்,ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் ஜம்புராஜ் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...