நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூா் கடலில் தவறவிட்ட நகை மீட்பு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் குளித்தபோது, பக்தா் தவற விட்ட 5 பவுன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:14 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் குளித்தபோது, பக்தா் தவற விட்ட 5 பவுன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது.

மதுரை, ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன்(45). இவா் குடும்பத்துடன் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தாா். அங்கு, அவா்கள் கடலில் குளித்த போது கண்ணனின் 5 பவுன் தங்கச்சங்கிலி கடலில் தவறி விழுந்துவிட்டது. இதுகுறித்து தற்காலிக கடலோர பாதுகாப்புக் குழு இளைஞா்களிடம் தெரிவிக்கப்பட்டது. கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஜாண், மணி, பிரபு தலைமையிலான 20 போ் கடலில் சுமாா் 2 மணி நேரம் தேடி 5 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு கண்ணனிடம் ஒப்படைந்தனா். இளைஞா்கள் குழுவுக்கு அவரது குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.