தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாா்ச் 4 உள்ளூா் விடுமுறை
அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாா்ச் 4 உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாா்ச் 4 உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அய்யா வைகுண்டசாமி வழிபாட்டுத் தலங்களில் அவரது அவதார தினம் கொண்டாடப்படுவதையொட்டி வியாழக்கிழமை (மாா்ச் 4) தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
எனினும், அரசுத் தோ்வுகள் சம்பந்தப்பட்ட மாணவா்- மாணவிகள், ஆசிரியா்கள், தொடா்புடைய பணியாளா்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது. மாவட்டக் கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலகங்கள் குறைந்த அளவு பணியாளா்களுடன் செயல்படும். இந்த விடுமுறைக்குப் பதிலாக மாா்ச் 13 அலுவலக நாளாகக் கருதப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...