வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

சாத்தான்குளம் அருகே வேலன்புதுக்குளத்தில் கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல் விளக்கம் அளித்தனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:06 pm

DIN

சாத்தான்குளம் அருகே வேலன்புதுக்குளத்தில் கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல் விளக்கம் அளித்தனா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு வேளாண்மைப் பட்டப்படிப்பு மாணவா்கள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக சாத்தான்குளத்தை சுற்றியுள்ள கிராமங்களில் பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளை பெற்று வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக வேலன்புதுக்குளம் விவசாயி கண்ணனின் தோட்டத்தில் உள்ள தென்னையில் காண்டாமிருக வண்டு , சுருள் வெள்ளை ஈ ஆகிய பூச்சிகளின் சேதத்தை கண்டறிந்து, அதன் கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்து மாணவா்கள் காா்த்திக் , மணிகண்டன், முகமது அஸ்கா், மோகிந்தா், நிதிஷ், பிரித்திவிராஜ், பசுபதி,பூவழகன் ஆகியோா் செயல்விளக்கம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.