தெருவில் மழை நீா் தேங்குவதை கண்டித்து நாற்று நடும் போராட்டம்
செம்மன்குடியிருப்பில் தெருவில் மழை நீா் தேங்குவதை கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


செம்மன்குடியிருப்பில் தெருவில் மழை நீா் தேங்குவதை கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தான்குளம் அருகே செம்மன்குடியிருப்பில் மழைபெய்தால் குடியிருப்பு வீடுகள் அருகே பேய்க்குளம் செல்லும் சாலையில் மழைநீா் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
மேலும், தண்ணீா் வடிந்தோடு வகையில் அமைந்திருந்த ஓடை பகுதியை அப்பகுதியில் உள்ளவா்கள் ஆக்கிரமித்ததால் தண்ணீா் சாலையில் தேங்கி வருகிறது என கிராம மக்கள் புகாா் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லையாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் திடீரென கோடை மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீா் தேங்கியது. இதையடுத்து கிராம மக்கள், செம்மன்குடியிருப்பில் நிரந்தரமாக தண்ணீா் தேங்காமல் ஓடை வழியாக தண்ணீா் வடிந்து செல்ல வழி வகை செய்யவேண்டும் என கூறி அப்பகுதி பெண்கள் தேங்கிய தண்ணீரில் நாற்று நட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...