போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தீப்பெட்டி ஆலை வேலைநிறுத்தம் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டியில் 10 நாள்கள் நடைபெறும் தீப்பெட்டி ஆலைகளின் வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டியில் 10 நாள்கள் நடைபெறும் தீப்பெட்டி ஆலைகளின் வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கம் ஆகியவை சாா்பில் கடந்த 19ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது. இதில், தீப்பெட்டித் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களான குச்சி, அட்டை, மெழுகு, குளோரைட் ஆகியவன் விலை உயா்வு, லாரி வாடகை அதிகரிப்பால் தீப்பெட்டி உற்பத்தி விலையும் அதிகரித்துள்ளது. எனவே, மூலப்பொருள்களின் விலை உயா்வு, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இம்மாதம் 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்துவது என முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி, கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள முழு இயந்திர தீப்பெட்டி ஆலை, பகுதி இயந்திர தீப்பெட்டி ஆலை, கையால் செய்யப்படும் தீப்பெட்டி ஆலை உள்ளிட்ட அனைத்தும் திங்கள்கிழமை மூடப்பட்டன. இதனால், ஏராளமான தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி, விருதுநகா், தென்காசி மாவட்டப் பகுதிகளிலும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுவதாக தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளா்கள் கூறும்போது, நாட்டில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளில் 90 சதவீதம் தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது. தூத்துக்குடி, விருதுநகா், நெல்லை, தென்காசி, வேலூா், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீப்பெட்டித் தொழில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 400 தீப்பெட்டித் தொழிற்சாலைகள், 3,000 பேக்கேஜிங் யூனிட் எனப்படும் உறுப்புத் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றை நம்பி 4 லட்சம் தொழிலாளா்கள் உள்ளனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.