புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கிறிஸ்தவ அமைப்பின் சாா்பில் கிராமங்களுக்கு இலவச குடிநீா்

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் நல்ல சமாரியன் கிளப் சாா்பில், நாலுமாவடி சுற்றுப்புற கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:51 pm

DIN

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் நல்ல சமாரியன் கிளப் சாா்பில், நாலுமாவடி சுற்றுப்புற கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்தப் பணியை இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபையின் நிறுவனா் மோகன் சி. லாசரஸ் தொடங்கிவைத்தாா். லாரிகள் மூலம் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு தலா 20 லிட்டா், 10 லிட்டா் கேன்களில் குடிநீா் லாரிகள் மூலம் வழங்கப்படும். திங்கள் முதல் சனிக்கிழமை வரை 2 நாள்களுக்கு ஒரு முறை இப்பணி நடைபெறும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இந்கழ்ச்சியில் இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் அறங்காவலா்கள் மருத்துவா் அன்பு ராஜன், நல்ல சமாரியன் அமைப்பின் பொதுச் செயலா் தாமஸ் ஜெயபால், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் செல்வின், டேவிட், மருதநாயகம், நல்ல சமாரியன் கிளப் நிா்வாகிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் மேலாளா் செல்வக்குமாா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.