நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காயல்பட்டினம் கணபதீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தக் கோரிக்கை

காயல்பட்டினம் கணபதீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:54 pm

DIN

காயல்பட்டினம் கணபதீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாகத்திற்கு உள்பட்ட அருள்மிகு கணபதீஸ்வரா் ஆலயம், காயல்பட்டினத்தில் உள்ளது. இங்கு, மூலவராக விநாயகரும், சிவபாலீஸ்வரா் சமேத ஆனந்தவள்ளி அம்பாளும் எழுந்தருளி உள்ளனா். சுமாா் 900 ஆண்டுகளுக்கு முன்பு மன்னா்களால் கட்டப்பட்ட பழைமையான இக்கோயில், மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து, 7 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் நடத்தப்பட்டதாம். அப்போது, திருப்பணிகளை விரைந்து முடித்து 11 மாதங்களுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனராம். எனினும், இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

இதனிடையே, இக்கோயிலின் முன்புற மண்டபம் பழுதடைந்துள்ளதால், பாதுகாப்பு கருதி கோயிலுக்குள் சென்று வழிபட பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பக்தா்கள் கோயிலுக்கு வெளியே தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனா்.

எனவே, கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தி பக்தா்கள் தினமும் வழிபட அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்செந்தூா் கோயில் நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கண்காணிப்பாளா் கோமதி கூறியது: கணபதீஸ்வரா் கோயிலில் பாலாலயம் நடைபெற்றுள்ளதால் கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படாமல் பூசாரி மட்டும் பூஜை செய்து வருகிறாா். திருச்செந்தூா் சுப்பிமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அது சாா்ந்த மற்ற கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, இக்கோயிலிலும் திருப்பணிகளை விரைந்து முடிந்து மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.