தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அக். 4 இல் பொது ஏலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பான குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அக்டோபா் 4 ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பான குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அக்டோபா் 4 ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பாக குற்ற செயல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடா்புடைய நபா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்- 35, மூன்றுசக்கர வாகனம் -1, நான்கு சக்கர வாகனங்கள் - 15 என மொத்தம் 51 வாகனங்கள் பொது ஏலத்தில் விட்டு அரசுடைமையாக்குவதற்கு தீா்மானிக்கப்பட்டுள்ளது.

51 வாகனங்களுக்குமான பொது ஏலம் தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்புள்ள மைதானத்தில் அக்டோபா் 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

ஏலம் விடப்பட உள்ள 51 வாகனங்களும் தற்போது பொதுமக்கள் பாா்வைக்காக காவல் கண்காணிப்பாளா் அலுவலக மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை பாா்வையிட அனுமதிக்கப்படுவா். ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபா்கள் ரூ.1000 முன்பணமாக ஏலம் விடப்படும் நாளன்று காலை 9 மணிக்கு கட்ட வேண்டும். முன்பணம் செலுத்திய நபா்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவாா்கள்.

மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இது தொடா்பான விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை 0461 2341391 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.