யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடியில் 9 மாத குழந்தை ரூ. 3 லட்சத்துக்கு விற்பனை

தூத்துக்குடியில் ரூ. 3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட 9 மாத ஆண் குழந்தையை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர். 

News image
தூத்துக்குடியில் மீட்கப்பட்ட 9 மாத குழந்தை.
Updated On :1 அக்டோபர் 2021, 12:50 pm

DIN

தூத்துக்குடியில் ரூ. 3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட 9 மாத ஆண் குழந்தையை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர். 

தூத்துக்குடி கொத்தனார் காலனி பகுதியைச் ஜெபமலர் (28) என்பவருக்கும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (38) என்பவருக்கும் கடந்த 2019 ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஜெபமலருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் 9 மாத ஆண் குழந்தை விற்பனை செய்யததாகக் கூறப்படுகிறது. மணிகண்டனுக்கு தெரியாமல், ஜெபமலர் தனது 9 மாத ஆண் குழந்தையை ரூ. 3 லட்சத்திற்காக தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கடந்த மாதம் 24 ஆம் தேதி விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் செய்தார். 

வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட சிப்காட் போலீஸார் ஜெபமலரிடம் இருந்து குழந்தையை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதாக  கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மேலசூரங்குடி பகுதியைச் சேர்ந்த செல்வமணி (52) மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி (40) அவர்களுக்கு உதவியாக இருந்த ராஜபாளையம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் (30) ஆகிய 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து அவர்களிடம் இருந்த 9 மாத ஆண் குழந்தையை மீட்டனர்.

மேலும், இந்த சம்பவத்தில் குழந்தையை விற்பனை செய்த ஜெபமலர், அவரது சகோதரர் அந்தோணி, தாய் கிருபா, தந்தை செல்வராஜ், புரோக்கர் ஜேசுதாஸ் உள்ளிட்ட சிலரை தேடி வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.