ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தூத்துக்குடியில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்:  4 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம்  20 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவைக் கடத்த இருந்த 4 பேரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
தூத்துக்குடியில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்:  4 பேர் கைது
Updated On :8 அக்டோபர் 2021, 9:38 am

DIN

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம்  20 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவைக் கடத்த இருந்த 4 பேரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள  தருவைகுளம் பகுதியில் இருந்து    கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தூத்துக்குடி கியூ பிரான்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையிலான போலீசார் அங்கு சோதனை நடத்தினர் .

அப்போது அங்கு ஒரு படகில் 15 மூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  500-கிலோ எடைகொண்ட கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர் இதனையடுத்து அந்த கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூபாய் 20 கோடி என கூறப்படுகிறது. இது சம்பந்தமாக  திரேஸ் புரத்தைச் சேர்ந்த ஜெனிஸ்டன் செல்வராஜ் உட்பட4 பேரை கைது செய்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.