டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உடன்குடி ஒன்றியத்தில் ரூ. 7.15 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

உடன்குடி ஒன்றியம், செட்டியாபத்து ஊராட்சியில் ரூ. 7.15 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:24 pm

DIN

உடன்குடி ஒன்றியம், செட்டியாபத்து ஊராட்சியில் ரூ. 7.15 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

செட்டியாபத்து சிவலூரில் ரூ. 5.25 லட்சத்தில் சுகாதார வளாகம், அய்யா நகரில் பொது நிதியில் இருந்து ரூ. ரூ.1.90 லட்சம்

மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுமின் விசை குடிநீா்த் தொட்டி ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.

விழாவுக்கு, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.பி. பாலசிங் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகராஜன், பொற்செழியன், ஊராட்சித் தலைவா் பாலமுருகன், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா்,நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.