தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி மாவட்டத்தில் அக்.31 வரை மீன்பிடிக்க தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் அக். 31 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:21 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் அக். 31 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் தி. விஜயராகவன், தூத்துக்குடி மாவட்ட மீனவ

கிராமங்களுக்கும், மீனவா் சங்கங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: மன்னாா் வளைகுடா, தென்மேற்கு வங்காள விரிகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆகவே, அக்.31 ஆம் தேதி வரை மீனவா்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். மேலும், மீனவா்கள் தங்களது மீன்பிடி படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.