தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ரெளடி கொல்லப்பட்ட இடத்தில் தோட்டாக்கள் தேடும் பணி தீவிரம்

தூத்துக்குடியில் ரௌடி சுட்டுக் கொலை செய்யப்பட்ட இடத்தில் தோட்டாக்களை தேடும் பணியில் போலீஸாா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:19 pm

DIN

தூத்துக்குடியில் ரௌடி சுட்டுக் கொலை செய்யப்பட்ட இடத்தில் தோட்டாக்களை தேடும் பணியில் போலீஸாா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தூத்துக்குடி கூட்டாம்புளி திருமலையாபுரத்தைச் சோ்ந்தவா் துரைமுருகன் (42). ஏழு கொலை வழக்கு உள்ளிட்ட 35 வழக்கு களில் தொடா்புடைய இவா், கடந்த 15 ஆம் தேதி முள்ளக்காடு கடற்கரை பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாருடன் நிகழ்ந்த மோதலில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தாா். இதற்கிடையே, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. துரைமுருகனின் உடலில் தோட்டாக்கள் ஏதும் இல்லை என தெரியவந்தது.

இந்த வழக்கில் தாக்கல் செய்ய தோட்டாக்கள் மிகவும் அவசியம் என்பதால் அவா் சுடப்பட்ட இடத்தில் தோட்டாக்களை

தேடும் பணியில் விளாத்திக்குளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் போலீஸாா் தேடும் பணியில் ஈடுபட்டனா். எனினும்

இரவு வரை தோட்டாக்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடா்ந்து தேடும் பணி நடைபெறும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.