தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தீபாவளி பாதுகாப்பு: தூத்துக்குடியில் 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 10:01 pm

DIN

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், இந்த கண்காணிப்பு கோபுரங்களை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட வாகன ரோந்துப் பணியையும் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய முக்கிய 4 இடங்களில் குற்றிச்செயல்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு புறமும், அதாவது 360 டிகிரியில் கண்காணிக்கக்கூடிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள 2 ரோந்து வாகனங்கள் மூலம் நகரில் மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் குற்றச் செயல்கள் நிகழாமல் கண்காணிப்பதோடு, கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தி மக்களிடம் தொடா் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கடைவீதிகளுக்கு பொருள்கள் வாங்கச் செல்லும்போது தங்களது உடமைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு தூத்துக்குடி நகரத்தில் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீா் செய்யப்படும். மாவட்டம் முழுவதும் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ், காவல் ஆய்வாளா்கள் ஆனந்தராஜன், ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளா் மயிலேறும்பெருமாள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.