தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடியில் ஆசிரியா்கள் காத்திருக்கும் போராட்டம்

தூத்துக்குதூத்துக்குடியில் ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுட்டனா்.டி

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:05 pm

DIN

தூத்துக்குடியில் ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுட்டனா்.

தமிழக கல்வித்துறை மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நலத் திட்ட உதவிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஆசிரியா்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க பணம் பெறுவதாகவும் கண்டித்தும், தூத்துக்குடி ஊரக வட்டார கல்வி அலுவலா் மீது மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்கக் கோரியும் தூத்துக்குடியில் ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் கலை உடையாா் தலைமை வகித்தாா். போராட்டத்தை மாநிலச் செயலா் பிரம்மநாயகம் தொடக்கிவைத்தாா். மாவட்டச் செயலா் செல்வராஜ் விளக்கிப் பேசினாா். மாவட்ட துணைத் தலைவா் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ், கல்வி மாவட்டத் தலைவா் குணசேகரன், செயலா் ஏபனேசா் உள்ளிட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.