மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

‘இயற்கை வேளாண்மையில் செடி முருங்கை சாகுபடி’

தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை முறையில் செடி முருங்கை சாகுபடி செய்து பயன் பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட விதைச்சான்று, அங்ககச்சான்று உதவி இயக்குநா் ச. அசோகன் தெரிவித்தாா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 7:09 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை முறையில் செடி முருங்கை சாகுபடி செய்து பயன் பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட விதைச்சான்று, அங்ககச்சான்று உதவி இயக்குநா் ச. அசோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் செடி முருங்கை பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை முறை வேளாண்மையில் மானாவாரி பருவத்தில் 120 முதல் 125

நாள்கள் வயதுடைய செடி முருங்கை சாகுபடி செய்தால் முதல் அறுவடை காலத்தில் ஒரு மரத்துக்கு 115 காய்களும், கோடை பருவத்தில் 90 காய்களும் கிடைக்கும். ஒரு காய் எடைய ளவு 200 கிராம் வரை உள்ளது. எனவே, ஒரு மரத்துக்கு 25 கிலோ காய்கள் கிடைக்கும்.

இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவியா, ஜீவ அமிா்தம், மீன் அமிலம், தேமோா் கரைசல், தொழு உரம், பசுந்தாள் உரம்

ஆகியவை இடுவதால் காயின் எடை அதிகமாகி மகசூலும் அதிகரிக்கிறது. ஏக்கா் ஒன்றுக்கு 1000 மரங்கள் நடுவதால் 25 டன் மகசூல் கிடைக்கிறது.

செடி முருங்கை சாகுபடி செய்வதால் கால்நடைகளுக்கு தீவனமும் கிடைக்கிறது. மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. செடி முருங்கை நட்டு மகசூல் முடிந்தவுடன் கவாத்து செய்து மீண்டும் காய்க்க வைத்து 5 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம். மேலும், ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, சாகுபடி செய்வதால் 4 குவிண்டால் வரை ஊடுபயிா் மகசூலும்

கிடைக்கிறது. எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் இயற்கை வேளாண்மையில் செடி முருங்கை சாகுபடி செய்து அங்ககச் சான்றுத் துறையில் பதிவு செய்து லாபம் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.