ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த இளைஞா் பலி

கோவில்பட்கோவில்பட்டியில் செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த இளைஞா், மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.டி

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 7:11 pm

DIN

கோவில்பட்டியில் செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த இளைஞா், மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கீழ ஆம்பூா் மேலபிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்லப்பா மகன் இசக்கிராஜ்(29). சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா், இம்மாதம் 3ஆம் தேதி ஊருக்கு திரும்பும் வழியில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னா் அவா் இளையரசனேந்தல் சாலையில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறிச் சென்ற போது, அதிலிருந்து கீழே விழுந்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.