ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கோவில்பட்டி அருகே பனை விதைகள் ஊன்றும் விழா

கோவில்பட்டிகோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி ஊருணியில் பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:37 pm

DIN

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி ஊருணியில் பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வில்லிசேரி எலுமிச்சை விவசாயிகள் சங்கத் தலைவா் பிரேம்குமாா் ஏற்பாட்டில் லிங்கம்பட்டி மற்றும் பெருமாள்பட்டி ஊருணியில் நடைபெற்ற பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சிக்கு, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மணிகண்டன் தலைமை வகித்து, பனை விதைகள் ஊன்றும் பணியை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, ஊருணி மற்றும் ஊருணியின் கரையோரங்களில் மொத்தம் 6 ஆயிரம் பனை விதைகள் ஊன்றும் பணி நடைபெற்றது. இதில், பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி பகுதி பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்கனவே, ஆலம்பட்டி ஊருணியில் 10 ஆயிரமும், சிவஞானபுரத்தில் உள்ள வாகைகுளம் ஊருணியில் 15 ஆயிரம் பனை விதைகளும் அண்மையில் ஊன்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.