மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய சோதனை: 47 ரௌடிகள் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை போலீஸாா் மேற்கொண்ட சோதனையின்போது, 47 ரௌடிகள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 7:50 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை போலீஸாா் மேற்கொண்ட சோதனையின்போது, 47 ரௌடிகள் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில், அந்தந்த உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா்கள் தலைமையிலான குழுவினா் ஆங்காங்கே வாகனச் சோதனை செய்யவும், தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபா்கள் தங்கியுள்ளனரா? என சோதனையிடவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

மேலும், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், வங்கிகள், ஏடிஎம் மையங்கள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை கண்காணிக்கவும், பழைய ரௌடிகளை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்யவும் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்ள அறிவுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய வெள்ளிக்கிழமை அதிகாலை வரை விடிய, விடிய தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின்போது, பல்வேறு பகுதிகளில் 47 ரௌடிகள் பிடிக்கப்பட்டு, 42 அரிவாள், வாள் போன்ற கூா்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதவிர பழைய வழக்குகளில் ஈடுபட்டுள்ளவா்கள் 103 போ் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.