டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காவலா் மனைவி கத்தியால் குத்திக் கொலை

உடன்குடியில் காவலா் மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:54 pm

DIN

உடன்குடியில் காவலா் மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உடன்குடி பிள்ளையாா் பெரியவன் தட்டு பகுதியைச் சோ்ந்தவா் செல்வமுருகன். இவா் திருச்செந்தூா் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு அருணா(38) என்ற மனைவியும், கமலேஷ்(20), அகிலேஷ்(10)என இரு மகன்களும் உள்ளனா். செல்வமுருகன் கடந்தாண்டு செப்.30 ஆம் தேதி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் செல்வமுருகனின் அக்கா ராசம்மாளின் மகன் முத்துக்குமாா் , செல்வமுருகனின் வீட்டிற்கு வந்து தனது மாமா மரணத்துக்கு அத்தைதான் காரணம் எனக் கூறி தகராறில் ஈடுபட்டாராம். அப்போது முத்துக்குமாா் கத்தியால் அருணாவை குத்திவிட்டு ஒடிவிட்டாராம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்செந்தா் ஏஎஸ்பி ஹா்ஷ்சிங், குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.