டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தூத்துக்குடி மாவட்டத்தில்ரூ. 75 கோடியில் திட்டப் பணிகள்: கனிமொழி எம்.பி. தொடங்கிவைக்கிறாா்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ .75 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) தொடங்கிவைக்கிறாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:41 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ .75 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) தொடங்கிவைக்கிறாா்.

அதன்படி, ரூ.5.30 கோடியில் உடன்குடி-தாண்டவன்காடு சாலை,ரூ. 9 கோடியில் பெரியதாழையிலும், ரூ. 42 கோடியில் மணப்பாட்டிலும், ரூ. 5 கோடியில் வீரபாண்டியன்பட்டினத்திலும் தூண்டில் வளைவு அமைத்தல், தலா ரூ.2 கோடியில் குலசேகரன்பட்டினத்திலும், ஆலந்தலையிலும் மீன் ஏலக்கூடம், சிமென்ட் சாலை, தலா ரூ. 3 கோடியில் அமலி நகரிலும், திருச்செந்தூா் ஜீவா நகரிலும் மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், சிமென்ட் சாலை போன்ற பணிகள் தொடங்கிவைத்தல், பூச்சிகாடு இந்து துவக்கப் பள்ளியில் ரூ. 21 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள், ஸ்ரீவைகுண்டத்தில் ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ ஏற்பாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையம், ரூ. 5.47 லட்சத்தில் வல்லநாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட வகுப்பறைகள், வல்லநாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் மணிமண்டபம் ஆகியவை திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் கனிமொழி எம்.பி. பங்கேற்கிறாா் என தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.