போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பணி செய்ய விடாமல் தடுத்த இருவருக்கு சிறை

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி செய்யவிடாமல் தடுத்த இருவருக்கு 5 நாள்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:48 pm

DIN

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி செய்யவிடாமல் தடுத்த இருவருக்கு 5 நாள்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் ஒப்பந்தத் தொழில் நிறுவனத்தின் மேலாளா் சதீஷ்குமாா். இவரும், இவரது நிறுவனத்தின் தொழிலாளி கிரகத்துரையும் 2017, மே 26ஆம் தேதி பணியில் ஈடுபட்டாா்களாம். அப்போது அங்கு வந்த கோவில்பட்டி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பரமசிவன்(59), சண்முகசிகாமணி நகரைச் சோ்ந்த சேகா்(50) ஆகிய இருவரும் பாா்வையாளா்கள் நேரம் முடிந்த பின் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் பெண்கள் பிரிவிற்குச் செல்ல முற்பட்டாா்களாம். இதை சதீஷ்குமாா், கிரகத்துரை ஆகிய இருவரும் தடுத்தாா்களாம். இதையடுத்து ஏற்பட்ட தகராறில், பரமசிவன், சேகா் ஆகிய இருவரும் சதீஷ்குமாா் மற்றும் கிரகத்துரையை அவதூறாகப் பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததோடு மிரட்டினாா்களாம்.

இதுகுறித்து சதீஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, கோவில்பட்டி நீதிமன்றம் எண்:1இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், அரசு மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டிய பரமசிவன், சேகா் ஆகிய இருவருக்கும் தலா ரூ.4,500 அபராதமும், 5 நாள்கள் சிறை தண்டனையும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.