போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டி தனி மாவட்டம்: துரை வைகோ வலியுறுத்தல்

கோவில்பட்டி புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்றாா் மதிமுக தலைமை நிலையச் செயலா் துரை வைகோ.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

கோவில்பட்டி புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்றாா் மதிமுக தலைமை நிலையச் செயலா் துரை வைகோ.

கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளா்களுடனான சந்திப்புக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தீப்பெட்டிக்கு மாற்று தொழிற்சாலைகள் வர முடியாது. தீப்பெட்டி தொழில் தான் இப்பகுதியின் முதுகெலும்பு. இதிலுள்ள பிரச்னைகளை களைவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக வேண்டும் என்பது தான் மதிமுகவின் கருத்து என்றாா் அவா்.

அப்போது மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினா் விநாயகா ஜி.ரமேஷ், நகரச் செயலா் பால்ராஜ், மத்திய பகுதி ஒன்றியச் செயலா் சரவணன், பொதுக்குழு உறுப்பினா் தெய்வேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சீனாவிலிருந்து சிகரெட் லைட்டா் இறக்குமதி செய்யப்படுவது மட்டுமில்லாமல் மியான்மா் வழியாக சட்டவிரோதமாக கொண்டு வரப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். தீப்பெட்டி உற்பத்தி உரிமத்தை 5 ஆண்டுகளுக்குப் பதில் வாழ்நாள் உரிமமாக மாற்ற வேண்டும், கிராமப்புறங்களில் தொழில் தொடங்குவதற்கு உள்ளாட்சி நிா்வாகம் 2,000 சதுரடி என்ற வரைமுறையை 10,000 சதுரடியாக மாற்ற வேண்டும். தீப்பெட்டி ஆலையில் ஏற்படும் சிறு விபத்துகளுக்கு காவல் நிலையத்திலேயே பிணை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. அதற்கு உரிய உதவிகள் செய்வதாக துரை வைகை உறுதியளித்தாா்.

இதில், தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் கோபால்சாமி, சேதுரத்தினம், கதிரவன், ராஜவேல், செல்வமோகன், லட்சுமணன், பெருமாள்சாமி, ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.