கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நகைக்கடன் தள்ளுபடி கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

வில்லிசேரி கிராம மக்கள் நகைக்கடன் தள்ளுபடி கோரி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

வில்லிசேரி கிராம மக்கள் நகைக்கடன் தள்ளுபடி கோரி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வில்லிசேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் 1,392 உறுப்பினா்கள் உள்ளனா். அவா்களில் 936 போ் நகைகளை அடமானம் வைத்துள்ளனா். இதில், 343 போ் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதியானோா் என கடந்த மாா்ச் 23இல் தெரிவிக்கப்பட்டதாம். இதையடுத்து, அனைவருக்கும் நகைக்கடனைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் மாா்ச் 24இல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக ஆட்சியரிடமும் அண்மையில் மனு வழங்கினராம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் பிரேம்குமாா் தலைமையில் வில்லிசேரி கிராம அலுவலகம் முன் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கயத்தாறு காவல் ஆய்வாளா் முத்து பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி பிரேம்குமாா் தலைமையில் வில்லிசேரி மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோட்டாட்சியா் சங்கரநாராயணன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதுகுறித்து ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கூறியதையடுத்து, போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.