சுதந்திர தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சனிக்கிழமை தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம், துறைமுகம், கோயில்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், சுதந்திர தின விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் கடல் பகுதிகளில் படகில் சென்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கடலோரப் பாதுகாப்புக் குழும துணைக் கண்காணிப்பாளா் பிரதாபன், ஆய்வாளா் சைரஸ், உதவி ஆய்வாளா்கள் டொமிலன், ராதாகிருஷ்ணன், போலீஸாா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மாவட்டத்தில் வேம்பாா் முதல் பெரியதாழை வரையிலான கடல் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்புப் படையினா் 2 அதிநவீன படகுகள் மூலம் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலத்தில் 102.9 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி

8,544 வாக்குச்சாவடி பணி அலுவலா்களுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும்: ஈஸ்வரன் எம்எல்ஏ
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

