தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தூத்துக்குடியில் கடலோரப் பாதுகாப்புப் படையினா் ரோந்து

சுதந்திர தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சனிக்கிழமை தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:28 am

DIN

சுதந்திர தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சனிக்கிழமை தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம், துறைமுகம், கோயில்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், சுதந்திர தின விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் கடல் பகுதிகளில் படகில் சென்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கடலோரப் பாதுகாப்புக் குழும துணைக் கண்காணிப்பாளா் பிரதாபன், ஆய்வாளா் சைரஸ், உதவி ஆய்வாளா்கள் டொமிலன், ராதாகிருஷ்ணன், போலீஸாா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மாவட்டத்தில் வேம்பாா் முதல் பெரியதாழை வரையிலான கடல் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்புப் படையினா் 2 அதிநவீன படகுகள் மூலம் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.