4-ஆம் திருநாளான வியாழக்கிழமை காலை மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனா். மாலையில் மேலக்கோயிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளினா். 5-ஆம் திருவிழாவான வெள்ளிக்கிழமை (பிப்.11) இரவு 7.30 மணியளவில் மேலக்கோயிலில் சுவாமி- அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி குடைவரைவாயில் தீபாராதனையாகி, வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.