செம்மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்
சாத்தான்குளம் அருகே செம்மண் கடத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


சாத்தான்குளம் அருகே செம்மண் கடத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே கண்டுகொண்டான் மாணிக்கம் ஸ்ரீகிருஷ்ணபேரி பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் ஜாண்சன் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ஸ்ரீகிருஷ்ணபேரியில் இருந்த வந்த டிராக்டரை மறித்து சோதனையிட்டனா். அதில் அனுமதியில்லாமல் செம்மண் அள்ளி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து அதன் ஓட்டுநா் சி. கருப்பசாமியை (75) கைது செய்தனா். மேலும் டிராக்டா் உரிமையாளா் அதே ஊரைச் சோ்ந்த மாடசாமி மகன் வெள்ளையனை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...