பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தூத்துக்குடியில் முதல் முறையாக வாக்களித்த நரிக்குறவர் சமூகத்தினர்

தூத்துக்குடியில் முதல் முறையாக நரிக்குறவர் சமூகத்தினர் வாக்களித்தனர்.

News image

வாக்காளர் அடையாள அட்டையுடன் நரிக்குறவர் சமூகத்தினர்.

Updated On :19 பிப்ரவரி 2022, 4:55 am

தூத்துக்குடியில் முதல் முறையாக நரிக்குறவர் சமூகத்தினர் வாக்களித்தனர்.

நாடோடி வாழ்க்கை முறையை கொண்ட நரிக்குறவர் சமூகத்தினருக்கு இதுவரை வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 20 ஆவது வார்டு பகுதிக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த பல ஆண்டுகளாக நிரந்தரமாக தங்கி உள்ள நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 52 பேரை வாக்காளர் பட்டியலில் சேர்த்த மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியது. 

Story image

இதையெடுத்து நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் குடும்பத்தோடு சென்று கீதா மெட்ரிக் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கை பதிவு செய்தனர். தேர்தலில் முதல்முறையாக வாக்களித்தது தங்களுக்கு புதிய அனுபவமாக அமைந்ததாக நரிக்குறவர் சமூக பெண்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.