பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தூத்துக்குடி: பஞ்சர் ஒட்டும் தொழிலாளி வெட்டிப் படுகொலை

தூத்துக்குடி புறவழிச்சாலையில் பஞ்சர் ஒட்டும் தொழிலாளி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :19 ஜூன் 2022, 9:52 am

DIN

தூத்துக்குடி புறவழிச்சாலையில் பஞ்சர் ஒட்டும் தொழிலாளி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (47),  இவர் தூத்துக்குடி புறவழிச்சாலையில் மீன்வளக் கல்லூரி அருகே  சாலை ஓரத்தில் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் பஞ்சர் ஒட்டும் கடையில் ரத்த காயத்துடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கருப்பசாமி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்ட லாரி ஓட்டுநர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் கருப்பசாமியுன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நிகழ்ந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன், தூத்துக்குடி டவுன் பொறுப்பு உதவி காவல் கண்காணிப்பாளர் சந்திஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.

குற்றவாளிகளை  விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.