சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் கடை திறப்பு

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் விற்பனை நிலையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 ஜூன் 2022, 12:08 am IST

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் விற்பனை நிலையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் அந்தந்த ஊா்களை சாா்ந்த பாரம்பரியமிக்க உணவு பண்டங்கள் விற்பனை செய்வதற்கு ரயில்வே நிா்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பதற்கு ஏதுவாக, ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டலத் தலைவா் ராதாகிருஷ்ணன் திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

இதில், கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளா்கள் - விற்பனையாளா் நலச் சங்க செயலா் கண்ணன், விற்பனை நிலைய உரிமையாளா்கள் மாரிச்சாமி, மணிசங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.