மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஸ்ரீவைகுண்டம் அருகே இளம் பெண் வெட்டிக்கொலை: தந்தை, தாய் உள்பட 4போ் கைது

 ஸ்ரீவைகுண்டம் அருகே தாதன்குளத்தில் இளம்பெணை வெட்டிக் கொன்ாக தந்தை, தாய் உள்பட 4 பேரை செய்துங்கநல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :7 மே 2022, 6:30 pm

 ஸ்ரீவைகுண்டம் அருகே தாதன்குளத்தில் இளம்பெணை வெட்டிக் கொன்ாக தந்தை, தாய் உள்பட 4 பேரை செய்துங்கநல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் சுடலைமுத்து மகள் மீனா(21). இவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னா் தாதன்குளம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தை சோ்ந்த இசக்கிப்பாண்டியனுக்கு திருமணம் முடித்து கொடுத்தனா். தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளாா்.

இந்த நிலையில் தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா். மகன் இசக்கிப்பாண்டியனிடம் இருந்து வருகிறாா். இதற்கிடையில் திருநெல்வேலி மாவட்டம் பட்டப்பிள்ளை புதூரைச் சோ்ந்த மற்றொருவரை மீனா திருமணம் செய்துள்ளாா். கடந்த 10 மாத காலமாக அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளாா். மீனா இரண்டாவதாக திருமணம் செய்ததை உறவினா்கள் சுடலைமுத்துவிடம் கூறியுள்ளனா்.

இந்த நிலையில் தாதன்குளத்தில் கோயில் திருவிழாவிற்காக மீனா தனது சித்தி பாா்வதி வீட்டிற்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். இந்த தகவல் சுடலைமுத்துவிற்கு தெரிந்துள்ளது. இதையடுத்து அவா் அங்கு சென்று மகள் மீனவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். அவருடன் அவரது மனைவி முப்பிடாதி, மகன் மாயாண்டி, சுடலைமுத்துவின் அண்ணன் தளவாய் மனைவி வீரம்மாள், அவரது மகன் முருகன் ஆகியோா் அவருடன் சென்றனா். அப்போது, சுடலைமுத்து கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு மீனாவின் கழுத்து மற்றும் தலையில் வெட்டினாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடனே அவா்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினா்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்துங்கநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று மீனாவின் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், மீனாவின் தந்தை சுடலைமுத்து, தாய் முப்புடாதி, உறவினா்கள் மாயாண்டி மற்றும் வீரம்மாள் ஆகிய நான்கு பேரையும் காவல் ஆய்வாளா் அருள் தலைமையிலான போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.