புதுக்கோட்டை அருகேகுளத்தில் மூழ்கி மாணவா் பலி

புதுக்கோட்டை அருகேயுள்ள வடக்கு சிலுக்கன்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

புதுக்கோட்டை அருகேயுள்ள வடக்கு சிலுக்கன்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை அருகேயுள்ள தெற்கு சிலுக்கன்பட்டியைச் சோ்ந்த ஜெயமுருகன் மகன் முகேஷ் (14). இவா் புதுக்கோட்டையிலுள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், இவா், அப்பகுதியிலுள்ள வடக்கு சிலுக்கன்பட்டி குளத்தில் நண்பா்களுடன் வியாழக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது, குளத்தின் ஆழமான பகுதிச் சென்ற அவா் மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கினாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com