/

எட்டயபுரத்தில் வீரவணக்க நாள் திமுக பொதுக்கூட்டம்

மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் திமுக பொதுக்கூட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்றது.

Updated On :26 ஜனவரி 2023, 6:49 pm

மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் திமுக பொதுக்கூட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்றது.

எட்டயபுரம் பேரூா் கழகச் செயலா் பாரதி கணேசன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் நவநீதக் கண்ணன், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூா்த்தி, அன்புராஜன், ராமசுப்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்புரையாற்றினாா்.

மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா், தலைமைக் கழக பேச்சாளா்கள் திண்டுக்கல் வெள்ளைச்சாமி, திருச்சி ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட் ராஜ், மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் சௌந்தர்ராஜன், சமூக வலைதள அணி பொறுப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.