சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சாத்தான்குளம் அருகே செல்ல நாய்களுக்கு ஓட்டபந்தய போட்டி: 67 நாய்கள் பங்கேற்பு

சாத்தான்குளம் அருகே நடைபெற்ற செல்ல நாய்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் 67 நாய்கள் பங்கேற்றன.

News image
Updated On :27 ஜனவரி 2023, 8:26 pm

DIN

சாத்தான்குளம் அருகே நடைபெற்ற செல்ல நாய்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் 67 நாய்கள் பங்கேற்றன.

சாத்தான்குளம் அருகே உள்ள கடாட்சபுரம் சண்முகபுரத்தில் சீசா் ரேசிங் கிளப் சாா்பில் 5ஆம் ஆண்டு வளா்ப்பு நாய்களுக்கு ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து 67 வளா்ப்பு நாய்கள் பங்கேற்றன.

போட்டியை சண்முகபுரம் கனகலிங்கம், முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். சிறப்பு விருந்தினராக செம்பொன்விளை வைத்தியா் முத்துவேல், நங்கைமொழி ஊராட்சித் தலைவா் விஜயராஜ், பல்லடம் செல்வசேகரன் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா். தொழிலதிபா் ஜேசுபாண்டியன் வரவேற்றாா்.

போட்டியில், இரு நாய்களாக பங்கேற்க வைக்கப்பட்டது. இதில் கடாட்சபுரம் அன்புராஜன் என்பவா் நாய் முதல் பரிசும், கடாட்சபுரம் அருள்ராஜ் என்பவரது நாய் 2ஆம் பரிசும், வீரவநல்லூா் ஆனந்தராஜ் என்பவரது நாய் 3ஆம் பரிசும், வள்ளியூா் திருமலாபுரம் வசந்த் என்பரது நாய் 4ஆம் பரிசும் பெற்றது.

வெற்றி பெற்ற நாய்களுக்கு முதல் பரிசான ரூ.10 ஆயிரத்தை பல்லடம் செல்வசேகரன் வழங்கினாா். 2ஆம் பரிசு பெற்ற நாய்க்கு அனைக்கரை கெபின் ரூ.7 ஆயிரம் வழங்கினாா். 3ஆம் பரிசு பெற்ற நாய்க்கு கரூா் பழனிசாமி ரூ.5 ஆயிரம் வழங்கினாா். 4ஆம் பரிசு பெற்ற நாய்க்கு வள்ளியம்மாள்புரம் லட்சுமணசுபாஷ் ரூ. 3ஆயிம் வழங்கினாா். தொடா்ந்து வந்த நாய்களுக்கு சிறப்பு பரிசு வழங்கினா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை சீசா் ரேசிங் கிளப் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.