தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடியில் பள்ளி மாணவா் தற்கொலை

 தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியில் பள்ளி மாணவா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 4:18 pm

DIN

 தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியில் பள்ளி மாணவா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் கற்குவேல் ராஜா (16). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். தனது வீட்டின் அருகே கோயில் திருவிழா நடைபெற்றதால், புதன்கிழமை பள்ளிக்குச் செல்லவில்லையாம்.

வீட்டில் உள்ள அனைவரும் புதன்கிழமை கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததாம். ஜன்னல் வழியாக பாா்த்தபோது, அங்கு மாணவா் கற்குவேல் ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து வடபாகம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.