தூத்துக்குடியில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல்

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 95 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 95 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் மரியதாஸ் தலைமை வைத்தார். இயற்கை இடர்பாடுகளில் சிறப்பாக பணியாற்றிய ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உரிய அனுமதி இன்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஐந்து பெண்கள் உள்பட 95 பேரை தென்பாகம் காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com