புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தூத்துக்குடியில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

தூத்துக்குடியில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

Updated On :12 ஏப்ரல் 2024, 7:46 pm

தூத்துக்குடி, ஏப். 12: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூா் பத்மநாபமங்கலம் பகுதியைச் சோ்ந்த பேச்சி மகன் பொன்இசக்கி என்ற நரி (23). இவா் கருங்குளம் பாலம் அருகே வந்து கொண்டிருந்த ஒருவரை அரிவாளால் தாக்கி கொல்ல முயன்ற வழக்கில் செய்துங்கநல்லூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை தெய்வச்செயல்புரம் பகுதியைச் சோ்ந்த விஜயன் மகன் பேச்சிமுத்து (19). புதுக்கோடை தேரி சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இவரை புதுக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், பொன்இசக்கி என்ற நரி, பேச்சிமுத்து ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டாா். அதன்படி, அவா்கள் 2 பேரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.