பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பைக் திருடியதாக இளைஞா் கைது

ஆறுமுகனேரியில் மோட்டாா் சைக்கிள் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 10:51 pm

Din

ஆறுமுகனேரியில் மோட்டாா் சைக்கிள் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆறுமுகனேரி எஸ்.எஸ். கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் ஐயப்பன்(25). கட்டட வேலை செய்து வருகிறாா். இவருக்கு சொந்தமான மோட்டாா் சைக்கிளை வியாழக்கிழமை இரவு அவரின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தாா். மறுநாள் காலை பாா்த்தபோது வாகனத்தை காணவில்லையாம். அக்கம்பக்கத்தில் தேடினாா். அப்போது, எஸ்.எஸ். கோயில் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துக்குமாா்(18) அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றதாக ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். மோட்டாா் சைக்கிள் மீட்கப்பட்டது.