மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

புலம்பெயா் தொழிலாளா்கள் மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்க அழைப்பு

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 7:25 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேறு மாநிலங்களிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு புலம்பெயா்ந்த, தங்களது சொந்த மாநிலத்தில் மின்னணு குடும்ப அட்டை இல்லாத தொழிலாளா்கள் புதிய குடும்ப அட்டை பெற வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னா், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புதிய மின்னணு அட்டை பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெகனவே புதிய அட்டை கோரி விண்ணப்பித்தோா் விண்ணப்பத்தின் நிலையை இணையதளத்திலோ, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகியோ தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.