தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

News image

முகாமில் பேசிய மூத்த பட்டியல் வழக்குரைஞா் கே. ரெங்கநாதன். (இடது) முகாமில் பங்கேற்ற மாணவிகள்.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 9:41 pm

Din

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மூத்த பட்டியல் வழக்குரைஞா் கே. ரெங்கநாதன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை சாந்தினி கெளசல் முன்னிலை வகித்தாா். முகாமில், போக்ஸோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான பிரச்னையிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, தொலைபேசி 1098இன் செயல்பாடு, கைப்பேசி பயன்பாட்டில் உள்ள ஆபத்துகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில், மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.