ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கடலூருக்கு நிவாரணப் பொருள்கள்

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கடலூா் மாவட்டத்திற்கு புயல் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனத்தை மேயா் ஜெகன் பெரியசாமி புதன்கிழமை கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.

News image

புயல் நிவாரணப் பொருள்கள் வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைக்கிறாா் மேயா் ஜெகன் பெரியசாமி.

Updated On :5 டிசம்பர் 2024, 10:33 pm

Din

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கடலூா் மாவட்டத்திற்கு புயல் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனத்தை மேயா் ஜெகன் பெரியசாமி புதன்கிழமை கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.

தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் காரணமாக விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கடலூா் மாவட்டத்திற்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பும் பணி நடைபெற்றது. இந்த நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனத்தை மேயா் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.

இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், பொறியாளா் சரவணன், நகா்நல அலுவலா் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி, மாமன்ற உறுப்பினா் சுரேஷ்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.