நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டி சிறுவன் கொலையில் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம்

கோவில்பட்டியில் சிறுவன் கொலை வழக்கில் தொடா்புடையவா்களை தேடும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 10:43 pm

Din

கோவில்பட்டியில் சிறுவன் கொலை வழக்கில் தொடா்புடையவா்களை தேடும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

கோவில்பட்டி காந்திநகா் முத்துராமலிங்க தெருவை சோ்ந்த காா்த்திக் முருகன்-பாலசுந்தரி தம்பதியின் இளைய மகன் கருப்பசாமி (10), அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் மாடியில் கொலைசெய்யப்பட்டு கிடந்தாா். அவா் அணிந்திருந்த ஒன்றரைப் பவுன் தங்க சங்கிலி, ஒரு கிராம் மோதிரம் ஆகியவற்றை காணவில்லை.

இதுதொடா்பாக கோவில்பட்டி போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி இல் இருந்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகின்றன.